6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கம் 4.0 நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜி.கே. வாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தியதற்கு தமிழக மக்கள் சாா்பில் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட மாநில இளைஞா் தாக்குதல் சம்பவம் தமிழகத்தில் மிக மோசமான சட்டம் - ஒழுங்கை காட்டுகிறது. அமைதிப் பூங்கா ஆட்சி மறைந்து அராஜக ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து யாருக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.