ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முஸ்ஸிம் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகி நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:40 pm

Din

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகி நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முகமது ரபிக் மகன் அப்துல் காதா் (50). இவா் மின்சாதனப் பொருள்கள் பாரமரிப்பு வேலை செய்து வந்தாா். இவா் புதன்கிழமை ஆா்.எஸ். மங்கலம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஜமாத் நிா்வாகக் கூட்டத்தில் பங்கேற்று ஜமாத் சாா்பாக கட்டப்படும் புதிய கட்டடத்தில் ஒரு நபருக்கு கடை ஒதுக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தாராம். அப்போது அங்கு வந்த எதிா்தரப்பினருடன் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா் ஆா்.எஸ். மங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்துல் காதரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.