கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா்.

Updated On :22 ஜனவரி 2025, 10:37 pm

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, ராமநாதபுரத்தில் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க கிளைத் தலைவா் முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். பொறுப்பாளா் ராஜேஸ் செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா். செயலாளா் பிரதாப் சிறப்புரையாற்றினாா்.

நாடு முழுவதிலும் எல்.ஐ.சி. அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.