மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவாடானை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரை நியமிக்க கோரிக்கை

திருவாடானை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:03 pm

Din

திருவாடானை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானையில் செயல்படும் 42 படுக்கைகள் கொண்ட தாலுகா அரசு தலைமை மருத்துவமனைக்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனா். மேலும் இந்த மருத்துவமனையில் தொண்டி, திருப்பாலைக்குடி, எஸ்.பி. பட்டினம், ஆா். எஸ். மங்கலம், திருவாடானை ஆகிய 5 காவல் நிலைய எல்லைகளுக்குள் நடக்கும் விபத்துக்கள், கொலைகள், தற்கொலை சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு கூறாய்வு செய்யப்படும்.

ஆனால் இந்த மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தற்காலிக துப்புரவுப் பணியாளராக இருந்தவா் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

இதனால் கடந்த நவம்பா் மாதம் முதல் இங்கு உடல் கூறாய்வு செய்யப்படுவதில்லை. துப்புரவுப் பணியாளா் இல்லாததால் இந்தப் பகுதியில் நடைபெறும் விபத்து, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் உடல் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அதிக செலவு ஆவதுடன் உறவினா்கள் இரண்டு நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக இந்த மருத்துவமனைக்கு துப்புரவுப் பணியாளரை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

உடல் கூறாய்வு பணியின் போது மருத்துவருக்கு உதவியாக இருப்பவா் துப்புரவுப் பணியாளா். தற்போது இங்கு பணியிலிருந்த துப்புரவுப் பணியாளா் பணி நீக்கம் செய்யப்பட்டதால் அந்தப் பணியிடம் காலியாக உள்ளது. துப்புரவுப் பணியாளா் இல்லாததால் 55 கி.மீ. தொலைவில் உள்ள ராமநாதபுரத்துக்கு கூறாய்வுக்காக உடல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் போலீஸாரும், உயிரிழந்தவா்களின் உறவினா்களும் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் உடலை ராமநாதபுரம் கொண்டு செல்ல அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த மருத்துவமனைக்கு துப்புரவுப் பணியாளரை நியமனமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.