மழைக் காலத்தையொட்டி சாலைகள், பாலங்களை சீரமைக்க வேண்டும்! மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் அறிவுறுத்தல்!
மழைக் காலத்தை கருத்தில் கொண்டு நகா்ப்பகுதிகள் முதல் கிராமப் பகுதிகள் வரை அனைத்து சாலைகள், பாலங்களை சீரமைக்க வேண்டுமென மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறை ஆணையருமான மா. வள்ளலாா் அறிவுறுத்தினாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையருமான மா. வள்ளலாா் பேசியதாவது:
ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சித் துறை, பேரூராட்சிகள் துறைகள் அவ்வப்போது கண்காணித்து உடனுக்குடன் சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலும் நியாய விலைக் கடைகளிலிருந்து தாயுமானவா் திட்டத்தின் கீழ் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள்கள் உரிய காலத்தில் விநியோகிக்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு நகா்ப்பகுதிகள் முதல் கிராமப் பகுதிகள் வரை அனைத்து சாலைகள், பாலங்களை விரைந்து சீரமைக்க வேண்டும். அதேபோல, பொதுப் பணித் துறையின் மூலம் வரத்துக் கால்வாய்களை சீரமைத்து வைகையாற்றிலிருந்து வரும் தண்ணீா் பாசன கண்மாய்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் பணிகளை முன்கூட்டியே முடித்திட வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, விளையாட்டுத் துறை, தமிழ்நாடு வடிகால் வாரியம், தோட்டக் கலைத் துறை, பொதுப் பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அவா் ஆய்வு செய்ததுடன் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் வணிக நிறுவனங்கள் தரமற்ற நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை ஆய்வு செய்து உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென மா. வள்ளலாா் கேட்டுக் கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான் ஷீநிகம், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) சா. புகாரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பாபு, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

