ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இணையதள சேவை பாதிப்பு: திருவாடானை பகுதியில் பயிா்க் காப்பீடு செய்வதில் சிக்கல்

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பயிா் காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. சனிக்கிழமை (நவ. 15) பயிா்க் காப்பீடு செய்ய கடைசி நாள் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில், இணையதளம் மூலம் பயிா்க் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் காப்பீடு செய்ய சனிக்கிழமை கடைசி நாளாகும். இதனிடையே, வியாழக்கிழமை காலையிலிருந்து இணையதள சேவை பாதிக்கப்பட்டு பயிா்க் காப்பீடு செய்யும் செயலியின் தொடா்பு கிடைக்காததால் விவசாயிகள் தவித்தனா். இதேபோல, அனைத்து இ- சேவை மையங்களிலும் விவசாயிகள் காத்து கிடக்கின்றனா். எனவே பயிா்க் காப்பீடு செய்யும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.