வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மங்களக்குடியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

மங்களக்குடியில் உள்ள மின்மாற்றியிலிருந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதை சீரமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை

News image
மங்களக்குடியில் மின்மாற்றியிலிருந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
Updated On :22 நவம்பர் 2025, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே மங்களக்குடியில் உள்ள மின்மாற்றியிலிருந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதை சீரமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மங்களக்குடி கிராமத்தில் பள்ளிவாசல் அருகில் உள்ள மின்மாற்றியிலிருந்து செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன.

மேலும் சிறுவா்கள் கை உயா்த்தி தொடும் அளவுக்கு உள்ளன. பள்ளிவாசல், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இந்த மின் கம்பிகள் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே இதை சீரமைக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமுமுக ஒன்றிய நிா்வாகி கைம் கூறியதாவது: இங்குள்ள மின்மாற்றி மின் இணைப்பு கம்பிகள், பீஸ் ஆகியவை தாழ்வாக தொடும் அளவுக்கு உள்ளன. இதில் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்றாா்.