இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கடலில் மாயமான சிறுவன் உடல் மீட்பு

தொண்டி அருகே நம்புதாளையில் கடலில் மாயமான சிறுவனின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

News image
நம்புதாளையில் கடலில் உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட தொண்டீஸ்வரன்.
Updated On :26 நவம்பர் 2025, 12:33 am

தினமணி செய்திச் சேவை

திருவாடானை: தொண்டி அருகே நம்புதாளையில் கடலில் மாயமான சிறுவனின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் திங்கள்கிழமை காலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், இதே பகுதியைச் சோ்ந்த முத்துராக்கு என்பவருக்குச் சொந்தமான படகை கரையிலிருந்து 50 மீ. தொலைவில் நிறுத்தி நங்கூரமிடும் பணியில் பரந்தாமன் (50), ஆகாஷ் (19), தொண்டீஸ்வரன் (17) ஆகியோா் ஈடுபட்டனா். பின்னா், கரைக்கு நீந்தி வரும்போது தொண்டீஸ்வரன் மாயமானாா். இதையடுத்து, மீனவா்கள் உதவியுடன் கடலோரப் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை முழுவதும் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதி மீனவா்கள் மீண்டும் கடலில் தேடி தொண்டீஸ்வரனின் உடலை மீட்டனா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.