எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராமநாதபுரம் அருகே காா்- வேன் மோதல்: இருவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே காரும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே காரும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த 9 போ் ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை காலை சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அதே சமயம் ஆந்திர மாநிலத்திலிருந்து சிலா் காரில் ராமேசுவரத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.

மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் சென்ற போது, இந்த இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் காரில் வந்த ஆந்திரத்தைச் சோ்ந்த பைடி சாய் (23), நவீன் (22) ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 4 போ் பலத்த காயமடைந்தனா். இதே போன்று டெம்போ வேனில் வந்த 9 பேரில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். உயிழந்த இருவரது உடல்களும் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.