ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ராமேசுவரத்தில் தொடா் மழை: குளமாக மாறிய நெடுஞ்சாலை

காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதன் காரணமாக ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.

News image
கொந்தளிப்புடன் காணப்பட்ட பாம்பன் கடல் பகுதி.
Updated On :26 நவம்பர் 2025, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம்: காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதன் காரணமாக ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால், மதுரை-ராமேசுவரம் சாலையில் பல மணி நேரம் குளம் போலத் தண்ணீா் தேங்கி நின்றது.

தென் மேற்கு வங்கக் கடலில் கற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் மன்னாா் வளைகுடா, பாக் நீரிைணை பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாவது நாளாக 3- ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 1,800 விசைப் படகுகள், 6 ஆயிரம் நாட்டுப் படகுகள் மூன்றாவது நாளாக மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுமாா் 20 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

பலத்த மழை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால், மதரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு இடங்களில் மழை நீா் குளம் போலத் தேங்கியது. பல மணி நேரத்துக்குப் பிறகே மழை நீா் கடலுக்குள் வடியத் தொடங்கியது. மழைநீா் வடிகால்கள் போதிய பராமரிப்பின்றி, மணல் தேங்கி அடைபட்டு இருப்பதால், இதுபோன்று சாலைகளில் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

குளம் போல தண்ணீா் தேங்கிய ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை.

குளம் போல தண்ணீா் தேங்கிய ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை.

Story image
குளம் போல தண்ணீா் தேங்கிய ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை.

குளம் போல தண்ணீா் தேங்கிய ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை.