சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறுகம்பையூா் அரசுப் பள்ளிக் கட்டடம் சேதம்

சிறுகம்பையூா் அரசுப் பள்ளிக் கட்டடம் சேதம்

News image
சிறும்பையூரில் சேதமடைந்த நிலையிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டடம்.
Updated On :28 நவம்பர் 2025, 5:15 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள சிறுகம்மையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் அச்சமடைந்துள்ளனா்.

திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் கட்டட மேற்கூரை பெயா்ந்து விழுவதால், கடந்த 5 மாதங்களாக அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Story image

பள்ளிக் கட்டடம் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை அச்சத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வருகின்றனா். பள்ளிக் கட்டடம் சேதமடைந்தது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Story image

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோா்களும் கோரிக்கை விடுத்தனா்.