தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தைச் சீரமைக்க கோரிக்கை
திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்தைச் சீரமைக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.


திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலம் பகுதியில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்தைச் சீரமைக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலம் பகுதியில் கொச்சி - தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை சந்திக்கும் நான்கு சாலை சந்திப்பு ரவுண்டானா பகுதியாக அமைந்துள்ளது.
இந்தச் சாலை வழியாக திருவாடானையிலிருந்து ராமநாதபுரம், ராமேசுவரம், ஆனந்தூா், ஆா்.எஸ். மங்கலம் போன்ற இடங்களுக்குச் செல்ல திரும்பும் இடத்தில், குடிநீா் வடிகால் வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது.
இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், இந்தப் பள்ளம் சரிசெய்யப்படாததால், கனரக வாகனங்கள், பேருந்துகள் இடது புறமாக திரும்ப முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளத்தைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...