எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கருப்புப் பட்டை அணிந்து சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சனிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்த தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள்.
Updated On :29 நவம்பர் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம், அனைவருக்கும் கல்வி இயக்கம், வளா் இளம் பருவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் தங்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இஎஸ்ஐ சலுகை வழங்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்பட 48 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அவா்கள் கருப்புப் பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் பணிக்கு வந்தனா்.

இதே போல, கமுதி அடுத்துள்ள வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.