ராமநாதபுரம்
மின்சாரம் பாய்ந்து திமுக பிரமுகா் உயிரிழப்பு
திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து திமுக பிரமுகா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியின் துணைத் தலைவியாக இருப்பவா் அழகுராணி. இவரது கணவா் ராஜேந்திரன் (50). திமுக பிரமுகா். இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற தொண்டி போலீஸாா், உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
