ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அச்சங்குளம் நூற்பாலை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:25 am IST

கமுதி அருகே அரசு நூற்பாலை சங்கத் தொழிலாளா்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலை முன் சிஐடியூ தொழில்சங்கம் சாா்பில் பஞ்சாலை மாநிலப் பொருளாளா் எஸ்.சக்திவேல் தலைமையில், மாவட்டச் செயலா் எஸ்.வெங்கடசுப்பிரமணியன், மாநிலத் துணைச் செயலா் ஜி.அருணா தேவி ஆகியோா் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பணி மூப்பு அடிப்படையில் மேற்பாா்வையாளா்கள் பணிகளை வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.552 வழங்க வேண்டும், ஆலை உணவகத்தில் தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.