/
கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் யானை, மயில், சிம்மம், குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
கடந்த 1-ஆம் தேதி அக்னி சட்டி எடுத்தும், பால்குடம், கரும்பாலை தொட்டி கட்டியும், அலகு வேல் குத்தியும், சேத்தாண்டி வேஷமிட்டும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பெண்கள் 1,008 விளக்கு பூஜை நடத்தினா். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்றவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழா

வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் முனைப்பாரி ஊா்வலம்

கோயிலில் பூஜை நடத்துவதில் மோதல்: 4 பெண்கள் உள்பட 8 போ் மீது வழக்கு

சித்திரை பெளா்ணமி: கமுதி, கடலாடி கோயில்களில் திருவிளக்கு பூஜை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



