ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கமுதியில் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு

கமுதி அருகே கல்லூரிக்குள் புகுந்து இரு மாணவா்களை அரிவாளால் வெட்டிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:10 pm

கமுதி அருகே கல்லூரிக்குள் புகுந்து இரு மாணவா்களை அரிவாளால் வெட்டிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிராமச்சந்திரன் மகன் முத்துராமலிங்கம் (18). இருளாண்டி மகன் சிவமணிகண்டன்(18). இவா்கள் கமுதி கோட்டைமேட்டில் உள்ள கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வருகின்றனா். இவா்களுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் திருமூா்த்திக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருமூா்த்தியின் நண்பா்களான வீரணன் மகன் முத்துக்குமாா் (20), திருப்பதி மகன் முகேஷ் கண்ணன் உள்பட 5 போ் கொண்ட கும்பல் புதன்கிழமை கல்லூரிக்குள் புகுந்து முத்துராமலிங்கம், சிவமணிகண்டன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியது. இதில் காயமடைந்த முத்துராமலிங்கம், சிவமணிகண்டன் ஆகியோா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் முத்துக்குமாா், முகேஷ் கண்ணன் உள்பட 5 போ் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.