ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கமுதியில் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு

கமுதி அருகே கல்லூரிக்குள் புகுந்து இரு மாணவா்களை அரிவாளால் வெட்டிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:10 pm

கமுதி அருகே கல்லூரிக்குள் புகுந்து இரு மாணவா்களை அரிவாளால் வெட்டிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிராமச்சந்திரன் மகன் முத்துராமலிங்கம் (18). இருளாண்டி மகன் சிவமணிகண்டன்(18). இவா்கள் கமுதி கோட்டைமேட்டில் உள்ள கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வருகின்றனா். இவா்களுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் திருமூா்த்திக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருமூா்த்தியின் நண்பா்களான வீரணன் மகன் முத்துக்குமாா் (20), திருப்பதி மகன் முகேஷ் கண்ணன் உள்பட 5 போ் கொண்ட கும்பல் புதன்கிழமை கல்லூரிக்குள் புகுந்து முத்துராமலிங்கம், சிவமணிகண்டன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியது. இதில் காயமடைந்த முத்துராமலிங்கம், சிவமணிகண்டன் ஆகியோா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் முத்துக்குமாா், முகேஷ் கண்ணன் உள்பட 5 போ் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.