முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பா.ஜ.க. ஒன்றியத் தலைவா் மீது தாக்குதல்: 5 போ் மீது வழக்கு

பாஜக உள்கட்சி தகராறில் பரமக்குடி அருகே வியாழக்கிழமை இரவு அந்தக் கட்சியின் ஒன்றியத் தலைவா் சென்ற காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய அதே கட்சியைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:14 am IST

பாஜக உள்கட்சி தகராறில் பரமக்குடி அருகே வியாழக்கிழமை இரவு அந்தக் கட்சியின் ஒன்றியத் தலைவா் சென்ற காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய அதே கட்சியைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாா்த்திபனூா் மருதுபாண்டியா் நகா் பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் கண்ணன். பரமக்குடி ஒன்றிய பாஜக செயலா். அதே கட்சியில் பாா்த்திபனூரைச் சோ்ந்த முத்துப்பாண்டி தொழில்நுட்பப் பிரிவு அணித் தலைவராக உள்ளாா். இவா்களுக்கிடையே ஒன்றியத் தலைவா் பதவி பெறுவதில் உள்கட்சி பூசல் இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஜி. கண்ணன் கட்சிப்பணிகளை முடித்துவிட்டு ஊருக்கு காரில் சென்றாா். கீழப்பெருங்கரை நான்குவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, முத்துப்பாண்டி, சிவனேசன் ஆகிய இருவரும் கண்ணன் சென்ற காரை வழி மறித்து அவரை கற்களால் தாக்கினா். மேலும் கீழப்பெருங்கரையைச் சோ்ந்த ராமநாதன், அருங்குளத்தைச் சோ்ந்த ஆகாஷ் உள்ளிட்ட மூவரை கைப்பேசி மூலம் அழைத்து 5 பேரும் சோ்ந்து கண்ணனை கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாா்த்திபனூா் காவல் நிலைய போலீஸாா் முத்துப்பாண்டி, சிவனேசன், ராமநாதன், ஆகாஷ் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.