திருவாடானை அருகே பெற்றோரை தாக்கியதாக மகனைபோலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
திருவாடானை அருகே நகரிக்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகன் சதீஷ்குமாா் (33). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இதனால் மனைவி தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், சதீஷ்குமாா், வேறு ஒரு பெண்ணை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்தாராம்.
இதேபோல, வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பெண்ணை அழைத்து வந்த போது சதீஷ்குமாரின் சகோதரா் தட்டி கேட்டாா். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமாா் தான் வைத்திருந்த கத்தியால் தாய் பிச்சையம்மாளை தாக்கினாா்.
இதைத் தடுக்க வந்த தந்தை கண்ணனையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த பிச்சையம்மாளும், கண்ணனும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

ஆலங்குளம் அருகே சாலையில் சடலம் எரிப்பு: 6 போ் மீது வழக்கு

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

பெண் மீது தாக்குதல் 9 போ் மீது வழக்கு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
