மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

திருவாடானை பேரவைத் தொகுதிக்கு கூடுதலாக 453 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிதக்கு கூடுதலாக 453 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :11 ஏப்ரல் 2026, 9:50 pm

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிதக்கு கூடுதலாக 453 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் 378 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டப் பேரவைத் தொகுதியில் 21 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை கூடுதலாக 453 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.