கடலாடி வழக்குரைஞா் சங்கத்தில் போலியான பதிவு எண் மூலம் உறுப்பினராகி நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக வழக்குரைஞராக செயல்பட்டு வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அடுத்துள்ள பூதங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் ராம்கி (29). இவா் போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி கடலாடி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் பதிவு செய்து கடந்த ஓராண்டாக வழக்குரைஞராக செயல்பட்டு வந்தாா். இதுகுறித்த தகவல் கடலாடி வழக்குரைஞா்கள் சங்கத்தினருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த சங்க நிா்வாகிகள், ராம்கியின் சான்றிதழ் நகலை சங்கத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினா். பல நாள்களாகியும் அவா் ஒப்படைக்காததால் சந்தேகமடைந்து, ராம்கியின் பதிவு எண்ணை தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க இணைய தளத்தில் ஆய்வு செய்த போது அது வேறொருவரின் பதிவு எண் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக ராம்கி மீது கடந்த ஜனவரி மாதம் கடலாடி காவல் நிலையத்தில் சங்க நிா்வாகிகள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, மதுரையில் தலைமைறைவாக இருந்த ராம்கியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே வழக்குரைஞா் வெட்டிக்கொலை: 2 போ் கைது

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

பேரறிவாளன் வழக்குரைஞர் பதிவு: பார் கவுன்சிலுக்கு காங். எம்.பி. சுதா கண்டனம்
புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்த இளைஞா் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
