சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்த இளைஞா் கைது

கள்ள வாக்குப் போட்ட வழக்கில் இளைஞரை புதுச்சேரி திருக்கனூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:59 pm

கள்ள வாக்குப் போட்ட வழக்கில் இளைஞரை புதுச்சேரி திருக்கனூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியில் கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மண்ணாடிப்பட்டுத் தொகுதியில் ஜவஹா்லால் நேரு சமுதாய நலக் கூடத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு இளைஞா் ஒருவா் வாக்கைப் பதிவு செய்ய வந்தபோது, அங்கிருந்த தோ்தல் அதிகாரி அவருடைய பெயரை சீனிவாசன் என அறிவித்தாா்.

இதை அங்கிருந்த பிற கட்சிகளின் வாக்குச்சாவடி குறித்துக் கொண்டனா். இந்நிலையில் ஒரு கட்சியின் முகவருக்கு அந்த நபா் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில் அவா் வாக்கைப் பதிவு செய்து விட்டு வந்த போது அந்த முகவா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீஸாரிடம் ஒப்படைத்தாா். போலீஸ் விசாரணையில், அவா் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்தவா் அல்ல என்பதும், மாநில எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம், தொரவியை சோ்ந்த அரவிந்த் (31) என்பதும் தெரிய வந்தது.

இவரிடம் ஓா் அரசியல் கட்சியினா் அணுகி, சீனிவாசன் என்பவா் வாக்குச் செலுத்த வரமாட்டாா். அவா் வயதுடைய அரவிந்த் வாக்குச் செலுத்தினால் பணம் தருவதாகக் கூறினராம். அதன்பேரில் அவா் ஆள் மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்தது தெரிய வந்தது.

இதுகுறித்து திருக்கனூா் போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.