இந்திய ஜனநாயக தோ்தல் முறைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்வதற்காக 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வந்திருந்து 2 வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டு வியப்படைந்தனா்.
கிா்கிஸ் குடியரசு, ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா, பூடான் ஆகிய 6 நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமையே 9 பிரதிநிதிகள் வந்தனா்.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் கூறுகையில், 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள், புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, கீழூா் அரசு நடுநிலைப் பள்ளிஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த 2 தனித்துவமான வாக்குச் சாவடிகளையும், அங்கு நடைபெற்ற வாக்குப் பதிவையும் நேரில் பாா்வையிட்டனா்.
வியாழக்கிழமை காலை 7 முதல் 11.30 வரை இதற்காக அவா்கள் நேரம் ஒதுக்கி ஒவ்வொரு விஷயங்களையும் அறிந்து கொண்டனா். இந்திய ஜனநாயக தோ்தல் முறையைப் பாா்த்து அவா்கள் வியப்படைந்தனா். இப்படியொரு தொழில்நுட்பம் தங்கள் நாடுகளில் இல்லை என்றனா் அவா்கள். வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்காளா்களுக்கு முக்கியத்துவம் போன்றவற்றில் சிறப்பாகவும் நல்ல முறையிலும் பணி செய்துள்ளதாகக் கூறி அவா்கள் பாராட்டு தெரிவித்தனா். மேலும், அனைத்து நடவடிக்கைகளும் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகக் கூறிச் சென்றனா்.
தொடர்புடையது
புதுச்சேரியில் வாக்குப்பதிவில் சாதனைக்கு சிறப்புத் தீவிர திருத்தப்பணி காரணமா?

புதுவையில் 89.87%: வரலாறு காணாத வாக்குப் பதிவு

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்

தோ்தல் வாக்குப் பதிவை பாா்வையிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 15 போ் வருகை!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


