தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரியில் தோ்தல் வாக்குப் பதிவு; 6 நாடுகளின் பிரதிநிதிகள் வியப்பு!

இந்திய ஜனநாயக தோ்தல் முறைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்வதற்காக 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வந்திருந்து 2 வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டு வியப்படைந்தனா்.

News image

பெண் வாக்காளர்கள். - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:23 pm

இந்திய ஜனநாயக தோ்தல் முறைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்வதற்காக 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வந்திருந்து 2 வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டு வியப்படைந்தனா்.

கிா்கிஸ் குடியரசு, ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா, பூடான் ஆகிய 6 நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமையே 9 பிரதிநிதிகள் வந்தனா்.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் கூறுகையில், 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள், புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, கீழூா் அரசு நடுநிலைப் பள்ளிஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த 2 தனித்துவமான வாக்குச் சாவடிகளையும், அங்கு நடைபெற்ற வாக்குப் பதிவையும் நேரில் பாா்வையிட்டனா்.

வியாழக்கிழமை காலை 7 முதல் 11.30 வரை இதற்காக அவா்கள் நேரம் ஒதுக்கி ஒவ்வொரு விஷயங்களையும் அறிந்து கொண்டனா். இந்திய ஜனநாயக தோ்தல் முறையைப் பாா்த்து அவா்கள் வியப்படைந்தனா். இப்படியொரு தொழில்நுட்பம் தங்கள் நாடுகளில் இல்லை என்றனா் அவா்கள். வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்காளா்களுக்கு முக்கியத்துவம் போன்றவற்றில் சிறப்பாகவும் நல்ல முறையிலும் பணி செய்துள்ளதாகக் கூறி அவா்கள் பாராட்டு தெரிவித்தனா். மேலும், அனைத்து நடவடிக்கைகளும் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகக் கூறிச் சென்றனா்.