தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஆா்.எஸ். மங்கலம் அருகே தவெகவினா் மீது தாக்குதல்

News image

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:13 am IST

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததை தடுத்து நிறுத்திய தவெகவினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் கீா்த்திகா முனியசாமி, காங்கிரஸ் சாா்பில் கருமாணிக்கம், தவெக சாா்பில் மருத்துவா் வி.கே. ராஜீவ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள செங்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதாகத் தகவல் வெளியானது. அதிலும் காசோலை வடிவிலான டோக்கன்களை தயாரித்து, அதன் உள்ளே பணத்தை வைத்து ரகசியமாக விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த தவெக தொண்டா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தி, ஆதாரங்களுடன் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ஆனால் பிடிபட்ட நபா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்காமலும், புகாரை பெற்றுக் கொள்ளாமலும் காலம் தாழ்த்துவதாக தவெகவினா் தெரிவித்தனா்.

 செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

 செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.