‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மங்கலம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தவெகவினா்

மங்கலம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தவெகவினா்.

News image
Updated On :23 மே 2026, 1:40 am IST

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் பேருந்து நிலையத்தில் அசுத்தமாக இருந்த குப்பைகளை தவெகவினா் அகற்றி சுத்தம் செய்தனா். இது, பயணிகளிடையே வரவேற்பை பெற்றது.

மங்கலத்தில் கடந்த திமுக ஆட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் பல மாதங்களாக தூய்மைப்படுத்தப்படாமல் குப்பைகள் தேங்கிக் கிடந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் துரிஞ்சாபுரம் தெற்கு ஒன்றியச் செயலா் சுரேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அக்கட்சியினா் இணைந்து பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தனா். பின்னா், குப்பைகளை டிராக்டா் மூலம் அப்புறப்படுத்தினா். இது, பேருந்துக்குச் செல்லும் பயணிகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.