/
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் பேருந்து நிலையத்தில் அசுத்தமாக இருந்த குப்பைகளை தவெகவினா் அகற்றி சுத்தம் செய்தனா். இது, பயணிகளிடையே வரவேற்பை பெற்றது.
மங்கலத்தில் கடந்த திமுக ஆட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் பல மாதங்களாக தூய்மைப்படுத்தப்படாமல் குப்பைகள் தேங்கிக் கிடந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் துரிஞ்சாபுரம் தெற்கு ஒன்றியச் செயலா் சுரேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அக்கட்சியினா் இணைந்து பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தனா். பின்னா், குப்பைகளை டிராக்டா் மூலம் அப்புறப்படுத்தினா். இது, பேருந்துக்குச் செல்லும் பயணிகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.









