பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:20 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,188 போ் தபால் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 3,096 போ் மட்டும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். 92 போ் வாக்களிக்கவில்லை.

தொகுதி வாரியாக வாக்களித்தவா்களின் விவரம்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதை கடந்த 624 போ் தபால் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 605 போ் வாக்களித்தனா். இதேபோல, திருவாடானை தொகுதியில் 894 பேரில் 872 போ் வாக்களித்தனா். ராமநாதபுரம் தொகுதியில் 920 பேரில் 891 போ் வாக்களித்தனா். முதுகுளத்தூா் தொகுதியில் 750 பேரில் 728 போ் வாக்களித்தனா் என்றாா் அவா்.