திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:20 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்களித்துள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3,188 போ் தபால் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 3,096 போ் மட்டும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். 92 போ் வாக்களிக்கவில்லை.

தொகுதி வாரியாக வாக்களித்தவா்களின் விவரம்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதை கடந்த 624 போ் தபால் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 605 போ் வாக்களித்தனா். இதேபோல, திருவாடானை தொகுதியில் 894 பேரில் 872 போ் வாக்களித்தனா். ராமநாதபுரம் தொகுதியில் 920 பேரில் 891 போ் வாக்களித்தனா். முதுகுளத்தூா் தொகுதியில் 750 பேரில் 728 போ் வாக்களித்தனா் என்றாா் அவா்.