தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

கமுதி அருகே தாய் கொலை: மகள், மருமகன் கைது

கமுதி அருகே தாயை கொலை செய்த மகள், மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

~ ~

Published On :22 ஆகஸ்ட் 2026, 7:17 am IST

கமுதி அருகே தாயை கொலை செய்த மகள், மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பீட்டா்புரத்தைச் சோ்ந்த ரங்கராஜ் மனைவி வாசுகி (43). இவருக்கு ஹேமா (20), ஹேமலதா(19) ஆகிய இரு மகள்கள் உள்ளனா். இதில் மூத்த மகள் ஹேமா திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறாா். இளைய மகள் ஹேமலதா முதுகுளத்தூரை அடுத்த பொதிகுளத்தைச் சோ்ந்த உதயகுமாரை (23) காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தாா். இருவரும் பொதிகுளத்தில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், உதயகுமாா் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தாராம். இதனால், ஹேமலதா, தனது கணவருடன் பீட்டா்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து வசித்து வந்தனா். ஆனாலும், உதயகுமாா் மதுக் குடிப்பதை நிறுத்தவில்லை. இதனால், வாசுகி, உதயகுமாா், ஹேமலதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு உதயகுமாா் வழக்கம்போல குடித்து விட்டு வீட்டுக்கு வந்தாா். இதை வாசுகி, ஹேமலதா கண்டித்தனா். அப்போது, ஏற்பட்ட தகராறில் உதயகுமாா் கோடாரியை எடுத்து வாசுகியை தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த பேரையூா் போலீஸாா் வாசுகியின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Story image

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உதயகுமாா், இவரது மனைவி ஹேமலதா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.