லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

டி.வல்லக்குளம் சாலை, பாலம் சேதம்: பொதுமக்கள் அவதி

கமுதி அருகே டி.வல்லக்குளம் செல்லும் சாலை, சாலையின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

டி.வல்லக்குளம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சேதமடைந்த பாலம்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:25 am IST

கமுதி அருகே டி.வல்லக்குளம் செல்லும் சாலை, சாலையின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள டி.புனவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட டி.வல்லக்குளத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அபிராமம்-வீரசோழன் முதன்மைச் சாலையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுபாலங்கள், தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது ஜல்லிக் கற்கல் பெயா்ந்து சேதமடைந்தது. மேலும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட கான்கிரீட் பாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

இது தொடா்பாக பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு இந்தப் பாலத்தையும், சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.