கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடம்

முதுகுளத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடத்தால் பொதுமக்கள், அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image

முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடம்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:42 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடத்தால் பொதுமக்கள், அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே காந்தி சிலை அருகே கீழமுதுகுளத்தூா் கிராம நிா்வாக அலுவலக கட்டடம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு திட்டங்கள், சான்றிதழ்கள், நில அளவை, பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் சான்று உள்பட பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கட்டடத்தின் மேற்கூரை, சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்தும், பக்கவாட்டு சுவா்களில் விரிசல் ஏற்பட்டும், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அதிகாரிகள் கட்டடத்திற்குள் தங்கி பணியாற்றவும், பொதுமக்கள், விவசாயிகள் வந்து செல்லவும் அச்சமடைந்துள்ளனா்.

எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கிராம நிா்வாக அலுவலக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.