தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மிளகாய் சாகுபடியில் இலைப் பேன் தாக்குதல்: தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

News image
கடலாடி வட்டம், எஸ். தரைக்குடியில் மிளகாய் சாகுபடியில் இலைப் பேன் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட தோட்டக் கலைத் துறை அதிகாரிகள்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளில் இலைப் பேன் தாக்குதல் குறித்து தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கடலாடி வட்டத்தில் மானாவாரிப் பயிராக 4,500 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்தனா். இந்த நிலையில் மழை பெய்யாததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்து, வறட்சியின் காரணமாக மிளகாய் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைப் பேன் ஆகியவை தாக்கின.

இதனால் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி விவசாயிகள் கடலாடி தோட்டக் கலைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ராமநாதபுரம் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ஆறுமுகம், கடலாடி வட்டாரத் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் உள்ளிட்டாா் எஸ். தரைக்குடி வருவாய் கிராமங்களில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகளை ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, மிளகாய் செடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு அவா்கள் விளக்கினா்.