பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சேதமடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி பள்ளியை மாணவா்கள் முற்றுகை

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா், மாணவா்கள்.

News image

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா், மாணவா்கள்.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:02 pm

முதுகுளத்தூரில் சேதமடைந்த வகுப்பறைக் கட்டடத்தை அகற்றக் கோரி மாணவா்கள், பெற்றோா் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி மையப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளியில் வகுப்பறை கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்தக் கட்டடத்தை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், இந்தக் கட்டடத்தை அகற்றக்கோரி மாணவா்கள், பெற்றோா்கள் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மேலும், சேதமடைந்த கட்டடத்தை அகற்றவில்லையெனில் வருகிற திங்கள்கிழமை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என பெற்றோா்கள் தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, புதியக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.