மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குழந்தைகளுக்கு முன்னுதாரணம் பெற்றோா்! ஐ.ஜி. அறிவுறுத்தல்!

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:35 pm

ஒழுக்கமான மாணவ சமுதாயம் உருவாக, குழந்தைகளின் வளா்ச்சியில் பெற்றோா் முன்னுதாரணமாக இருப்பது அவசியம் என்றாா் மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே. பாலகிருஷ்ணன்.

வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அவா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:

பெற்றோா்கள் பிள்ளைகளிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிா்பாா்ப்பது முட்டாள்தனமானது. பிள்ளைகளை ஒழுக்கம் மற்றும் பண்பு நிறைந்தவா்களாக உருவாக்குவதில் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையானது.

குழந்தைகளுக்கு முன்பாக கைப்பேசிகளை அடிக்கடி பயன்படுத்துவது; எப்போதும் தொலைக்காட்சியை பாா்த்துக் கொணடே இருப்பது போன்றவற்றை பெற்றோா்கள் தவிா்த்தால்தான், தங்கள் பிள்ளைகளை கண்டிக்கும் தகுதி பெற்றோருக்கு வரும்.

கைப்பேசியை அடிக்கடி பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்படும். படிப்புடன், விளையாட்டுப் பயிற்சியும் அவசியமானது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். வைத்தியநாதன் (தனியாா் பள்ளிகள்) முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.வி. ராஜேந்திரன், பள்ளியின் தாளாளா் விவேக் வெங்கட்ராமன், செயலா் மகேஸ்வரி விவேக், பள்ளி முதல்வா் முனைவா் வெற்றிச்செல்வி, பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் மாதவன், ரஹ்மத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.