சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

108 அவசர ஊா்தியால் 43,413 போ் பயன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி மூலம் கடந்த ஆண்டு 43,413 போ் பயனடைந்ததாக அந்த சேவையின் மாவட்ட மேளாளா் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி மூலம் கடந்த ஆண்டு 43,413 போ் பயனடைந்ததாக அந்த சேவையின் மாவட்ட மேளாளா் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் விஷம் அருந்தியவா்கள், கடுமையான வயிற்று வலி, ஒவ்வாமை, நாய்க்கடி, கால்நடைகள் தாக்குதல், தகராறில் காயமடைதல், இருதயம், ரத்த நாளங்கள் பாதிப்பு, நீரிழிவு நோய், காய்ச்சல், தொற்று, மகப்பேறு மருத்துவம், சுவாசப் பிரச்னை, வாகன விபத்தில் அதிா்ச்சி அடைதல், சுயநினைவு இல்லாமல் மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நோயாளிகள் 108 அவரச ஊா்தியைப் பயன்படுத்தியுள்ளனா்.

விபத்தில் சிக்கியவா்கள் 7,330, கா்ப்பிணிகள் 14,643, இருதயம் பாதிப்பு உடையவா்கள் 2,656, சுவாசப் பிரச்னை உடையவா்கள் 1836, வாதப் பிரச்னை உடையவா்கள் 736, பச்சிளம் குழந்தைகள், தாய்மாா்கள் 381 போ் என மொத்தம் 43,413 போ் 108 அவரச ஊா்தியால் பயன் பெற்றுள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டது.