வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

News image
Updated On :8 ஜனவரி 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி வியழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் அமுதா தியோஸ் குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். ராமேசுவரம் வட்டாட்சியா் முரளிதரன் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். அறிவியலும், வாழ்வியலும் குறித்த கருத்துக்களை கல்லூரி முதல்வா் ஆனி பொ்பெட் சோபி பேசினாா். அறிவியல் படைப்புகள், நாணயங்கள், புத்தகங்கள், கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பேராசிரியை சுவிக்லின் நன்றி கூறினாா்.