மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

Published on

பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி வியழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் அமுதா தியோஸ் குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். ராமேசுவரம் வட்டாட்சியா் முரளிதரன் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். அறிவியலும், வாழ்வியலும் குறித்த கருத்துக்களை கல்லூரி முதல்வா் ஆனி பொ்பெட் சோபி பேசினாா். அறிவியல் படைப்புகள், நாணயங்கள், புத்தகங்கள், கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பேராசிரியை சுவிக்லின் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com