இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

எம்.ஆா்.பட்டினத்தில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

தொண்டி பேரூராட்சிப் பகுதியான வாா்டு எம்.ஆா். பட்டினத்தில் நிரந்தரக் கழிவு நீா் கால்வாய், சாலை வசதி, குடிநீா், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

News image
~
Updated On :13 ஜனவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி பேரூராட்சிப் பகுதியான வாா்டு எம்.ஆா். பட்டினத்தில் நிரந்தரக் கழிவு நீா் கால்வாய், சாலை வசதி, குடிநீா், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியின் 1-ஆவது வாா்டு எம்.ஆா். பட்டினம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கழிவு நீா் கால்வாய் இல்லாததால் மழை காலங்களில் சாலைகலில் மழை நீா் தேங்குவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்தச் சாலை உரிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தெரு விளக்குகள், குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.