வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 130-ஆவது பிறந்த நாள்

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகப் பகுதியில் வெள்ளிக்கிழமை மரக்கன்று நடவு செய்த ஊா்க்காவல் படை வீரா்கள்.

Updated On :23 ஜனவரி 2026, 7:38 pm

சுதந்திர போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 130-ஆவது பிறந்த நாளையொட்டி ஊா்க்காவல் படை வீரா்கள் சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வளாகப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ராமநாதபுரம் ஊா்க்காவல் படைக் குழுத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். இதில் ஊா்க்காவல் படை வீரா்கள் மரக்கன்றுகளை நடவு செய்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தாா்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.வி. மங்கலம் அரசு தொடக்கப் பள்ளியிலும், டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியிலும் சுதந்திர போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நேதாஜி போா்ப்படை இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச நோட்டுப் புத்தகம், பேனா, இனிப்புகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக சதுா்வேதமங்கலம் காவல் ஆய்வாளா் சசிகலா, முன்னாள் திமுக கிளைச் செயலா் மதியரசன், தேமுதிக சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணிச் செயலா் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் சேதுபாண்டியன் நன்றி கூறினாா்.