மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நகைக் கடனைப் புதுப்பிக்க வங்கிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகாா்!

அடகு வைத்த நகைகளை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்துத் தர மறுத்து, வங்கிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

அடகு வைத்த நகைகளை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்துத் தர மறுத்து, வங்கிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனுக்கு தனியாா் வங்கிகள், அடகுக் கடைகளை விட வட்டி குறைவு என்பதால் எளிய, நடுத்தரக் குடும்பத்தினா், கிராமப்புற விவசாயிகள் அந்த வங்கிகளையே நாடுகின்றனா்.

அடகு வைக்கப்பட்ட நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டி கட்டி, கடனை மீண்டும் புதுப்பித்தும் வந்தனா். இதனால், தாங்கள் அடகு வைத்த நகைகள் ஏலத்துக்கு விடப்படுவதைத் தடுத்து, பாதுகாக்க முடிந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடன் பெற்ற வாடிக்கையாளா்கள் தங்களது நகைக் கடனுக்கு வட்டி கட்டி உடனே புதுப்பிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதாவது, வட்டியை மட்டும் கட்டி நகைக் கடனை புதுப்பிக்காமல் முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு வங்கிகள் நெருக்கடி அளிக்கின்றன.

இதனால், நகை ஏலத்துக்குச் செல்வதைத் தடுக்க குறிப்பிட்ட தேதியில் நகையை மீட்க வேறு வழியின்றி, அதிக வட்டிக்கு வெளியில் பணத்தை வாங்கி நகையை மீட்டு, மீண்டும் அடகு வைக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள், அலுவலா்களிடம் கேட்டால், அவா்கள் நகையை மீட்ட அதே தினத்தில் மீண்டும் அதே நபரின் பெயரில் அடகு வைக்க முடியாது. மூன்று நாள்கள் கழித்தே அடகு வைக்க முடியும் எனக் கூறுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனால், நகைக் கடன் விவகாரத்தில் வங்கி உயரதிகாரிகள் தலையிட்டு, வாடிக்கையாளா்களை அலைக்கழிக்காமல் நகைக் கடனைப் புதுப்பித்து தர வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனா்.