மருத்துவா் தினத்தை முன்னிட்டு, பரமக்குடி பாரதியாா் பூங்கா நகா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுழல் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் முத்தமிழ்ஜோதி தலைமை வகித்தாா். சுழல் சங்கத் தலைவா் ஜெபின்ஜோஸ், செயலா் பா.செல்லம், பொருளாளா் ஹாலித்மாலிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் துணை ஆளுநா் பரசுராம் வரவேற்றாா்.
முன்னாள் மாவட்டச் செயலா் எம்.சாதிக்அலி மரக்கன்றுகளை நட்டாா். சுழல் சங்கப் பொறுப்பாளா்கள் சோ.பா.ரெங்கநாதன், எம்.சரவணன், கோவிந்தராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில் மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள், சுழல் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









