ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொண்டி அருகே 190 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 190 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா், பொலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடல் அட்டை

Published On :4 ஜூலை 2026, 2:25 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 190 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா், பொலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தொண்டி அருகேயுள்ள எம்.வி. பட்டினம் கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை வனத் துறை, காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 190 கிலோ கடல் அட்டைகளை, வனத் துறையினா், போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்க்காக பதுக்கி வைத்திருந்ததும், போலீஸாரை கண்டதும் அந்தக் கும்பல் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை வனத் துறையினா், போலீஸாா் திருவாடானை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.