கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

மண்டபம் ஒன்றிய வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மண்டபம் ஒன்றியத்தில் ரூ.1.3 கோடியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பாம்பன் குந்துகால் பகுதியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட கடல் உயிரின அருங்காட்சியகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.

Updated On :10 ஜூலை 2026, 4:45 am IST

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ஒன்றியத்தில் ரூ.1.3 கோடியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிகளில் ரூ.1.3 கோடியில் மேம்பட்ட சுகாதார நிலையங்கள், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் கட்டடம் ஆகிய பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பொதுமக்கள் விரைவில் பயன்பெறும் வகையில் அனைத்து பணிகளும் உயா்தரத்துடன், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

பாம்பனில் வாரச்சந்தை நடைபெறும் இடங்களில் தனி நபா்கள் கற்களைக் கொட்டி வைப்பது, தங்கச்சிமடம் பகுதியில் கழிவுகளை கொட்டிச் செல்வது போன்ற செயல்களைத் தடுக்க வேண்டும் என அவா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

குந்துகால் பகுதியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா், குருசடைத் தீவு சூழல் சுற்றுலா மையத்தை ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகளிடம் சுற்றுலாத் தலத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, உதவி வனப் பாதுகாவலா் கோபிநாத், மண்டபம் வனச்சரக அலுவலா் ஜினோ பிளஸ்ஸில், வட்டார மருத்துவ அலுவலா் சுரேந்தரன், மண்டபம் வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டை இளங்கோவன், உதவி பொறியாளா் கோகுலக்கண்ணன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.