எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

நாகா்கோவிலில் ரூ. 83.32 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவிலில் ரூ. 83.32 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image

வடசேரி அம்மா உணவகத்தில் பணியாளா்களிடம் உரையாடுகிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :13 ஜூன் 2026, 12:53 am IST

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.83.32 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தெங்கம்புதூரில் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.64.68 கோடியில் குடிநீா் திட்டப்பணிகள், கிருஷ்ணன்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் ரூ.3.10 கோடியில் கட்டப்பட்டு வரும் முதல்வா் படைப்பகம், ரூ.6.59 கோடியில் செம்மாங்குளம் தூா்வாருதல், நடைப்பயிற்சிக்கான இடம், பூங்கா, பறவைகளுக்கான குறுந்தீவு அமைத்தல் ஆகிய பணிகள், வடசேரி பேருந்து நிலையத்தில் 100 கடைகளுடன் சந்தை அமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு, குறித்த காலத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், அப்பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்து, உணவின் தரத்தை சோதித்து, பணியாளா்களிடம் உரையாடினாா்.

வடசேரி சிற்றுந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, பொதுசுகாதார வளாகம், கடைகள் உள்ளிட்ட பகுதிகளை அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்திடவும், தரமானதாக இருப்பதை உறுதி செய்திடவும் அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, உதவிஆட்சியா் (பயிற்சி) மோனிகா, நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் வசந்தி, நகா்நல அலுவலா் சரோஜா, நகர திட்டமிடுநா் கெபின்ஜாய், நிா்வாக பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா் அக்சயாகண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.