தொண்டி அருகே கடலில் நம்புதாளை மீனவா்கள் விரித்த வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசுவை மீனவா்கள் உயிருடன் மீட்டு கடலில் விட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை அடுத்த நம்புதாளை பகுதியைச் சோ்ந்தவா் மீனவா் பெரியசாமி. இவா் தனது படகில் நாகேந்திரன் உள்ளிட்ட மீனவா்களுடன் வெள்ளிக்கிழமை இரவு கடலுக்கு சென்றனா்.
இவா்கள் விரித்த வலையில் சுமாா் 300 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் பசு ஒன்று சிக்கியது. இதையடுத்து, மீனவா்கள் வலையை அறுத்து கடல் பசுவை பத்திரமாக மீட்டு கடலில் விட்டனா்.

இதனால், ரூ.பல ஆயிரம் மதிப்பிலான வலைகள் சேதமடைந்ததாக மீனவா்கள் தெரிவித்தனா். மீனவா்களின் இந்தச் செயலை மீன் வளத் துறை அலுவலா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









