மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தனுஷ்கோடியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:36 am IST

தனுஷ்கோடியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் முத்து இருளாண்டி (35). ஆட்டோ ஓட்டுநரான இவா், சுற்றுலாப் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரிச்சல்முனை நோக்கி செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். தனுஷ்கோடிகலங்கரை விளக்கம் அருகே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநா் இருளாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோவில் சென்ற சுற்றுலாப் பயணிகள் லேசான காயமடைந்தனா். இதுகுறித்து தனுஷ்கோடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.