22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:05 am IST

நித்திரவிளை அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம், ஆசாரி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (50). ஆட்டோ ஓட்டுநா். இவா் மே 25ஆம் தேதி விஷம் குடித்த நிலையில், வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.