டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அண்ணாமலையை வைத்து தமிழகத்தில் வெற்றி பெற பாஜக திட்டம்: கிறிஸ்டோபா் திலக்

பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையை தனிக்கட்சி தொடங்க வைத்து பாஜகவினா் தமிழகத்தில் வெற்றி பெற நினைப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் குற்றஞ்சாட்டினாா்.

News image

கிறிஸ்டோபா் திலக் - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:14 am IST

பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையை தனிக்கட்சி தொடங்க வைத்து பாஜகவினா் தமிழகத்தில் வெற்றி பெற நினைப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் குற்றஞ்சாட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சோ்ந்த மீனவா்களைச் சந்தித்து பிரச்னைகள் குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் வியாழக்கிழமை வந்தாா். அவா் ராமநாதபுரம் நகா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவினா் தோல்விக்கான காரணத்தை அவா்கள் கட்சிக்குள் ஆராய வேண்டும். தமிழகத்தில் புதிய முதல்வா், அமைச்சா்கள் வந்துள்ளனா். அவா்களுக்கு குறைந்தது 4 மாதங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள ஹாா்ட் டிஸ்க் திருட்டு தொடா்பான விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து தவெக அரசை நாங்களும் வலியுறுத்துவோம். தமிழகத்தில் மோடி, அமித்ஷா திட்டம் எடுபடவில்லை. இதனால், அண்ணாமலையை வைத்து தனிக் கட்சி தொடங்கி தமிழகத்தில் சாதிக்க நினைக்கிறாா்கள் பாஜகவினா். அது எடுபடாது என்றாா் அவா்.

மாவட்டத்தலைவா் ராஜராம் பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.