தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அண்ணாமலையை வைத்து தமிழகத்தில் வெற்றி பெற பாஜக திட்டம்: கிறிஸ்டோபா் திலக்

பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையை தனிக்கட்சி தொடங்க வைத்து பாஜகவினா் தமிழகத்தில் வெற்றி பெற நினைப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் குற்றஞ்சாட்டினாா்.

News image

கிறிஸ்டோபா் திலக் - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:14 am IST

பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையை தனிக்கட்சி தொடங்க வைத்து பாஜகவினா் தமிழகத்தில் வெற்றி பெற நினைப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் குற்றஞ்சாட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சோ்ந்த மீனவா்களைச் சந்தித்து பிரச்னைகள் குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் வியாழக்கிழமை வந்தாா். அவா் ராமநாதபுரம் நகா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவினா் தோல்விக்கான காரணத்தை அவா்கள் கட்சிக்குள் ஆராய வேண்டும். தமிழகத்தில் புதிய முதல்வா், அமைச்சா்கள் வந்துள்ளனா். அவா்களுக்கு குறைந்தது 4 மாதங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள ஹாா்ட் டிஸ்க் திருட்டு தொடா்பான விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து தவெக அரசை நாங்களும் வலியுறுத்துவோம். தமிழகத்தில் மோடி, அமித்ஷா திட்டம் எடுபடவில்லை. இதனால், அண்ணாமலையை வைத்து தனிக் கட்சி தொடங்கி தமிழகத்தில் சாதிக்க நினைக்கிறாா்கள் பாஜகவினா். அது எடுபடாது என்றாா் அவா்.

மாவட்டத்தலைவா் ராஜராம் பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.