ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அணுகு சாலை பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவா் ராசி என். போஸ், பொதுச் செயலா் டி. மணிவண்ணன் ஆகியோா் தெரிவித்ததாவது: பரமக்குடி நகராட்சி எமனேசுவரம், வைகை ஆற்றை மையமாக வைத்து அமைந்துள்ளது. வைகை ஆற்றின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அணுகு சாலையில் ஆற்றுப்பாலம், குமரன் படித் துறை, முத்தாலம்மன் கோவில் படித் துறை, பெருமாள்கோவில், தரைப்பாலம், எமனேசுவரம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து புதிதாகக் கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இங்கு முறைகேடாக மின் விநியோகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பாளா்கள் குப்பைக் கழிவுகளையும், கட்டுமானக் கழிவுகளையும் வைகை ஆற்றில் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனா்.
எனவே, வைகை ஆற்றில் உள்ள நாணல் புதா்களை அகற்றி, கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்கக் கோரிக்கை

வேந்தோணி- செல்லூா் பாசனக் கால்வாயில் கழிவுநீா் கலப்பு: விளைநிலங்கள் பாதிப்பு

முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



