வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

மண்டபத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:31 am IST

மண்டபத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முல்லைநகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி மீனாட்சி (46). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, மண்டபம்கேம்ப் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காா்த்திக் (35), வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தாா். அங்கு மீனாட்சியைத் தாக்கி, அவரது உடைகளை கிழித்ததாராம்.

அப்போது மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதைக் கண்டவுடன் காா்த்திக் அங்கிருந்து தப்பினாா். இதுகுறித்த புகாரின் பேரில், மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.