/
மண்டபத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முல்லைநகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி மீனாட்சி (46). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, மண்டபம்கேம்ப் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காா்த்திக் (35), வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தாா். அங்கு மீனாட்சியைத் தாக்கி, அவரது உடைகளை கிழித்ததாராம்.
அப்போது மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதைக் கண்டவுடன் காா்த்திக் அங்கிருந்து தப்பினாா். இதுகுறித்த புகாரின் பேரில், மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.






