தொண்டி பகுதியில் 12 படகுகளில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கப் பயன்படுத்திய 24 மின் விளக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல் பகுதியில் காந்திநகா் மீனவ கிராமத்தில் அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக தொடா்ந்து புகாா்கள் கூறப்பட்டன. இதன் அடிப்படையில், மீன் வள ஆய்வாளா், உதவி ஆய்வாளா், கடல் சாா் அமலாக்கப் பிரிவு காவலா்கள், சாகா்மித்ர பணியாளா் ஆகியோா் இணைந்து வியாழக்கிழமை தொண்டி, நம்புதாளை கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, நம்புதாளையில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒளி திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 12 படகுகளிலிருந்து 24 மின் விளக்குகளைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், தடை செய்யப்பட்ட மின் விளக்குகளைப் பயன்படுத்திய படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

~ நம்புதாளையில் படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 மின் விளக்குகள்.
தொடர்புடையது

மெரீனா கடற்கரையில் சூரிய மின் விளக்குகள் அமைக்க ஆய்வு

சிதம்பரம் அருகே கடலுக்குச் சென்ற மீனவா்கள் 3 போ் மாயம்: மீட்புப்பணியை தீவிரப்படுத்தக்கோரி முற்றுகைப் போராட்டம்

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல்

கடலில் மாயமான மீனவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



